உள்ளூர் செய்திகள்

மனைவியுடன் தகராறு; தீக்குளித்த கணவர் சாவு

Published On 2023-01-04 09:42 GMT   |   Update On 2023-01-04 09:42 GMT
  • நாகேஸ்வரன் (வயது 42). இவருக்கு ரஞ்சிதம் மலர் (38) என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
  • மது குடிக்கும் பழக்கம் உள்ள நாகேஸ்வரன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

சேலம்:

சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனி சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகேஸ்வரன் (வயது 42).

இவருக்கு ரஞ்சிதம் மலர் (38) என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள நாகேஸ்வரன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

புத்தாண்டு அன்றும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகேஸ்வரன் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News