உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் சுவரொட்டி ஒட்டுவதில் தகராறு: இறைச்சி கடை தொழிலாளி கொலையில் 3 வாலிபர்கள் கைது - மகனுக்கு தீவிர சிகிச்சை; மேலும் 3 பேரிடம் விசாரணை

Published On 2022-11-14 14:41 IST   |   Update On 2022-11-14 14:41:00 IST
  • தூத்துக்குடி 3 செண்ட் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து நேற்று மாலை தன்னுடைய 14 வயது மகனுடன் நின்று பேசி கொண்டிருந்தார்
  • முகேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவின் மகனை அரிவாளால் வெட்டினார்

தூத்துக்குடி:

தூத்துக்குடி 3 செண்ட் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). இவர் அழகேசபுரத்தில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் அந்த பகுதியில் தன்னுடைய 14 வயது மகனுடன் நின்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முகேஷ் (24) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவின் மகனை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த மாரிமுத்துவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த தூத்துக்குடி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் மகனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சுவரொட்டி ஒட்டுவதில் நடந்த தகராறில் முகேஷ் தரப்பினர் இந்த சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொட ர்பாக சிப்காட் பகுதியில் பதுங்கி இருந்த முகேஷ் (23), தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்த பத்ரகாளிமுத்து (27), எஸ்.என்.ஆர். நகரை சேர்ந்த ஜெயலிங்கம் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்பு டைய முத்துமீரான் (21), இன்பராஜ் (19), கண்ணன் (23) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News