உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் இறகு பந்து விளையாடுவதை படத்தில் காணலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுபந்து போட்டி

Published On 2022-07-30 07:19 GMT   |   Update On 2022-07-30 07:19 GMT
  • திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டி நடைபெறுகிறது.
  • ஒற்றையர், இரட்டையர், களப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டி இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் திண்டுக்கல், கோவை, மதுரை உள்பட 27 மாவட்டங்களில் இருந்து 90 பேர் கலந்து கொண்டுள்ளனர். உடற்தகுதி அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒற்றையர், இரட்டையர், களப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்ெவாரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ச

க்கர நாற்காலியில் அமர்ந்தபடி இறகுபந்து போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு கூடியிருந்த நபர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துகளை தெரிவித்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு நாளை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News