உள்ளூர் செய்திகள்

திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி ஆண்டு பெருவிழா

Published On 2023-08-04 15:09 IST   |   Update On 2023-08-04 15:09:00 IST
  • தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழா நடந்தது.
  • தினசரி உடையார்பாளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தீமிதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது.

தினசரி உடையார்பா ளையம் மகேந்திரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடத்தப்பட்டு வருகிறது.

விழாவை தொடர்ந்து நாளை ( சனிக்கிழமை) அரவாண் களப்பலியும், 6-ம் தேதி அன்று அர்ச்சுணன் தபசும் நடக்கிறது.

7-ம் தேதி படுகள நிகழ்ச்சியும், தொடர்ந்து திரவுபதையம்மன் கூந்தல் முடிதலும் நடக்கிறது.

மாலை 4 மணியளவில் அம்மன் வீதியுலாவாக புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் அக்னிபிரவேசம் எனப்படும் தீமிதி விழா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார்கள் செய்து வருகிறார்கள். 

Tags:    

Similar News