வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
- கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
- அவென்யூ பகுதிகளில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்காவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோல் ரயிலடி தோப்பு தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த சமைய லறை ரூ.23 லட்சம் செலவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. காமராஜர் அவென்யூ பகுதியில் ரூ.52 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகர், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், கணக்கர் ராஜ கணேஷ், கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், முபாரக்அலி, பாலமுருகன், நாகரத்தினம் செந்தில் உடன் இருந்தனர்.