உள்ளூர் செய்திகள்
போடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி
- 4 வயது சிறுமியை தோட்டத்தில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே தனது 4 வயது மகளுடன் ஒருவர் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுருளி ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் 4 வயது சிறுமியை தோட்டத்தில் இறக்கி விடுவதாக கூறி சுருளி ராஜ் தனது சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இதையறிந்த சுருளிராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சுருளிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.