உள்ளூர் செய்திகள்

மது பாக்கெட்டுகள் அழிப்பு

Published On 2023-03-01 09:57 GMT   |   Update On 2023-03-01 09:57 GMT
  • மதுபான பாக்கெட்டுகள் குவியல், குவியலாக அழிக்கப்பட்டன.
  • குழி தோண்டி அதில் மதுபானங்களை கொட்டியும், காலி பாக்கெட்டுக்களும் புதைக்கப்பட்டன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு கைப்பற்றப்பட்ட கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் குவியல், குவியலாக அழிக்கப்பட்டன.

ஓசூர் அருகே சானமாவு பகுதியில் மினி வேன் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த மது பாக்கெட்டுகள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சானமாவு கிராம நிர்வாக அலுவலர் வெண்மதி ஆகியோர் முன்னிலையில் உடைக்கப்பட்டு, பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி அதில் மதுபானங்களை கொட்டியும், காலி பாக்கெட்டுக்களும் புதைக்கப்பட்டன.

Tags:    

Similar News