உள்ளூர் செய்திகள்

கல்வராயன்மலையில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Published On 2023-09-07 06:29 GMT   |   Update On 2023-09-07 06:29 GMT
  • சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
  • வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள ஓடையில் வண்டைக்காப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவத ற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெ க்டர் குணசேகரன் வண்டை க்காப்பாடி வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 4 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சாராயம் பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News