உள்ளூர் செய்திகள்

அனைத்து வார்டு பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2022-10-07 05:03 GMT   |   Update On 2022-10-07 05:03 GMT
  • போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • நீர்தேங்கும் வகையில் உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து வார்டுகளிலும் நீர்தேங்கும் இடங்கள் ஆராயப்பட்டு கொசுக்கள் முட்டையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளிலும் உள்ள தண்ணீர் ெதாட்டிகள், நீர்தேங்கும் வகையில் உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொசுமருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக மீனாட்சிபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News