உள்ளூர் செய்திகள்
பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நிலுவை அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
பேராவூரணி:
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நிலுவை அகவிலைப்படியை உடன டியாக வழங்க வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
த.அ.ஊ.சங்க வட்ட தலைவர் ஏ.நாவலரசன் தலைமை வகித்தார்.
த.அ.ஊ. சங்க மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீமகேஷ் விளக்க உரையாற்றினார்.
வருவாய்துறை அலுவலர்கள் ரெத்தினம் மற்றும் மனோகரன் பேசினர்.
நிறைவாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலி நன்றி கூறினார்.