உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-23 13:39 IST   |   Update On 2022-12-23 13:39:00 IST
  • சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம்.
  • அ.தி.மு.க. கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.

மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா அன்புச்செல்வன்,தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் சண்முகசுந்தர் அனைவ ரையும் வரவேற்றார்.

மேலும், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேந்தர்,முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், மதிவாணன், லதா ஆசைத்தம்பி, சீதாலட்சுமி, குகநாதன், கார்த்தி, கலைமணி, மின்னல் கொடி, பாலகிருஷ்ணன், பாலதண்டாயுதம், நுணக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன், முருகதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News