உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

ஒட்டன்சத்திரம் அருகே 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு

Published On 2022-12-10 11:28 IST   |   Update On 2022-12-10 11:28:00 IST
  • 23-ந் தேதி 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மரக்கன்று நடுவதற்கு குழி தோண்டும் பணியில் 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளாக புதர்மண்டி கிடந்தது.

உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அந்த இடத்தை சுத்தப்படுத்தி பல வகையான மரக்கன்று நடவு செய்ய முடிவு செய்தார்.

இதற்காக நிலத்தை சுத்தப்படுத்தி தயார் படுத்தினர். மேலும் அங்கு 23-ந் தேதி 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் கின்னஸ் நடுவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை பார்வையிடுகின்றனர்.

இதனையொட்டி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மரக்கன்று நடுவதற்கு குழி தோண்டும் பணியில் 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்

Tags:    

Similar News