உள்ளூர் செய்திகள்

கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதை படத்தில் காணலாம். 

பாளையில் ராமசாமி கோவில் தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

Published On 2023-04-29 08:49 GMT   |   Update On 2023-04-29 08:49 GMT
  • பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது.
  • இந்த கோவிலையொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

நெல்லை:

பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை யொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

சிதிலமடைந்த தெப்பக்குளம்

கடந்த சில ஆண்டுகளாகவே தெப்பக்குளத்தை சுற்றி உள்ள கல் சுவர்கள் உடைந்து விழுந்ததோடு, தெப்பக்குளம் சிதிலம் அடைந்து காணப்படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.

எனவே தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என பக்தர்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தனர்.

சீரமைப்பு பணிகள்

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பக்தர்கள் கோவில் செயல் அலுவலர் சுஜாதாவிடம் புகார் கூறினர்.

இதுபற்றி செயல் அலுவலர் சுஜாதா கூறுகை யில், கோவில் தெப்பகுளம் பல வருடங்களாக சீரமைக் கப்படாமல் உள்ளது. எனவே சிதிலம் அடைந்து காணப்படும் தெப்பக்குக் குளத்தை சீரமைத்து திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

எனவே 2 அடிக்கு மட்டும் தண்ணீர் வைத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மீன்களுக்காக தெப்பக்குளத்திற்குள் ஒரு கிணறு உள்ளது. அதையும் தாண்டி தற்போது வெயி லின் தாக்கத்தால் மீன்கள் இறந்துள்ளது.

விரைவில் தெப்பக்குளத்தை முழுமையாக சீரமைத்து திருப்பணிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News