உள்ளூர் செய்திகள்

பருத்திக்கறை பூச்சி படையெடுப்பு

Published On 2023-07-10 09:22 GMT   |   Update On 2023-07-10 09:22 GMT
  • சென்னிமலை சுற்றுபுற கிராம பகுதி வயல்வெளி களில் பருத்திக்கறை பூச்சி படையெடுப்பு அதிகரித்து ள்ளது.
  • பல வருடங்களாக இந்த பூச்சி இனம் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த பருத்தி க்கறை பூச்சிகள் அதிக அளவில் பெருகி உள்ளது.

சென்னிமலை:

சென்னிமலை சுற்றுபுற கிராம பகுதி வயல்வெளி களில் பருத்திக்கறை பூச்சி படையெடுப்பு அதிகரித்து ள்ளது.

சென்னிமலை வட்டார பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து ஒரு வாரம் மழை அதிகம் பெய்தது, மேலும் வானமும் மேக மூட்டத்துடன் காணப்ப ட்டது.

இந்த இதமான சூழ்நிலை நிலவுவதால் பல்வேறு வகையான பூச்சி இனங்கள் உற்பத்தி ஆகி உள்ளது.

சென்னிமலை சுற்று வட்டார கிராமபுற வயல் வெளிகளில் மரங்கள் அடர்ந்த வேர் பகுதி, அதிக இலை தழைகள் உள்ள பகுதியில் கறுப்பு, சிவப்பு பூச்சி என்று சொல்லப்படும் பருத்திக்கறை பூச்சிகளின் உற்பத்தி அதிக மாக உள்ளது.

இந்த பூச்சி இனம் பருத்தி சாகுபடி செய்துள்ள வயல் வெளிகளில் பருத்தி காய்களை தின்று விடும். இதனால் இதற்கு பருத்தி க்கறை பூச்சி என்றும் அழைக்கின்றனர். பல வருடங்களாக இந்த பூச்சி இனம் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த பருத்தி க்கறை பூச்சிகள் அதிக அளவில் பெருகி உள்ளது.

Tags:    

Similar News