உள்ளூர் செய்திகள்

ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகளை படத்தில் காணலாம்.

ரூ.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Published On 2022-12-06 13:02 IST   |   Update On 2022-12-06 13:02:00 IST
  • ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
  • இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்து க்காளிப்பட்டி, மசக்கா ளிபட்டி, கவுண்டம்பா ளையம், சந்திர சேகரபுரம், அணைப்பா ளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மா பாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்ட னர். இந்த ஏலத்தில் 682 பருத்தி மூட்டைகள் ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 678 மூட்டைகளும், கொட்டு பருத்தி 4 மூட்டைகளும், கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8159-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9469-க்கும், கொட்டு ரக பருத்தி

ஒரு குவிண்டால் குறைந்த பட்சம் ரூ.4900 முதல் அதிகப்பட்சமாக ரூ.5300-க்கும் ஏலம் விடப்பட்டது. 

Tags:    

Similar News