கடலூர்- சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் கடைக்கு சீல் வைக்க வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் கடை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வரி பாக்கி செலுத்தாத தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு
- கடலூர் - சிதம்பரம் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் தனியார் ஜவுளிக் கடை இயங்கி வருகிறது.
- கடை நிர்வாகிகள் அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் தனியார் ஜவுளிக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தது. மாநகராட்சி சார்பில் வரிபாக்கி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரி பாக்கி செலுத்தாத நிலையில் இன்று காலை மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் அசோகன், பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் தனியார் ஜவுளிக்கடைக்கு நேரில் சென்றனர். பின்னர் சீல் வைக்க முயன்றனர். தற்போது அங்கு வந்த கடை நிர்வாகிகள் அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வரிப்பாக்கி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இன்று குறிப்பிட்ட தொகை வரிபாக்கி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.