உள்ளூர் செய்திகள்

கட்டிடதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-04-15 14:17 IST   |   Update On 2023-04-15 14:17:00 IST
  • நீண்ட நாட்களாக சீறுநீரகத்தில் கல் பிரச்சனையால் அவதிபட்டு வந்துள்ளார்
  • மன விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம்,பாரூர் அருகே உள்ள அனுமான் கோவில் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது42). கட்டிட தொழிலாளி.

இவருக்கு நீண்ட நாட்களாக சீறுநீரகத்தில் கல் பிரச்சனையால் அவதிபட்டு வந்துள்ளார்.இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை.

இதனால் மன விரக்தியில் இருந்த குமரேசன் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குமரேசன் உடலை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு கலைவானி (35) என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளது குறிப்பிடதக்கது.

இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News