உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் சாலையில் வேகத்தடை அமைக்கும் பணிகள் தீவிரம்
- சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
- வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது
கோத்தகிரி ,
நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்துசுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் கோத்தகிரி சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
மற்றும் கோத்தகிரி பகுதியில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட சாலைகளில் அதிவேகமாகவும் செல்கின்றன. வளைவுகளில் கனரக வாகனங்கள் வேகமாக திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக தொடர்ந்து விபத்துகள் நடக்கும் இடங்களில் கோத்தகிரி, ஊட்டி சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.