உள்ளூர் செய்திகள்
கோபால்பட்டியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
- இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.
குள்ளனம்பட்டி:
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா தலைமை தாங்கினார்.
வட்டாரத் தலைவர் ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.
மேலும் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சின்னசாமி, ஆனிமுத்து, ஜார்ஜ், சவேரியார், பிரபாவதி, பால்பாண்டி உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.