உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.

நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் அமைதிப் பேரணி

Published On 2022-08-12 09:49 IST   |   Update On 2022-08-12 09:49:00 IST
  • காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதிப்பேரணி நடந்தது.
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கோகுல்நாத் தலைமையில் மத்திய அரசை கண்டித்தும் 75வது சுதந்திர தினத்தை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் அப்துல் கனிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், நகரத் தலைவர் நடராஜன், மாவட்ட விவசாய அணி பிரிவு பொறுப்பாளர் துரை சேகரன், சித்தர்கள் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முத்தையா,

வட்டார பொறுப்பாளர் கவுரிநாத், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி ஸ்டெல்லா, மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டியன், மல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News