உள்ளூர் செய்திகள்

நிலத்தகராறில் மோதல் பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்கு

Published On 2022-10-15 09:14 GMT   |   Update On 2022-10-15 09:14 GMT
  • அன்பழகன் (வயது 50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
  • தகராறில் ஈட்டுப்பட்டு அன்பழகன் அவரது மனைவி வண்ணக்கொடி ஆகியோரை காயப்படுத்தியுள்ளனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம், பெரிய காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவதன்று ராஜேந்திரன் குடும்பத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈட்டுப்பட்டு அன்பழகன் அவரது மனைவி வண்ணக்கொடி ஆகியோரை காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்த வண்ண கொடி கொடுத்த புகாரின் பேரில் குமார், கந்தசாமி, சக்திவேல், மனிவாசன், ராஜா,அழகேசன், சுப்ர மணி, லட்சுமி, பாப்பாத்தி, ராஜேந்திரன், அலமேலு மற்றும் அடையாளம் தெரியாத 50 பேர் மீது தார மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News