உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே வீடு கட்டுவதில் மோதல்: இருதரப்பை சேர்ந்த 6 பேர் காயம்

Published On 2022-10-09 15:03 IST   |   Update On 2022-10-09 15:03:00 IST
  • இருவருக்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் கைகலப்பு ஏற்பட்டது.
  • ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதால் லட்சுமப்பா அது குறித்து சாரதாவிடம் கேட்டார்.

சூளகிரி, அக்.9–-

சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே வரகானப் பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாகப்பா மகன் லட்சுமப்பா (வயது 65). இவருக்கு திருமணமாகி மனைவி , மகன் உள்ளனர்.

இந்த நிலையில் லட்சுமப்பாவுக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் மகள் சாரதா ( 37)என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதால் லட்சுமப்பா அது குறித்து சாரதாவிடம் கேட்டார். இதனால் இருவருக்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் கைகலப்பு ஏற்பட்டது.பின்னர் ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டதில் லட்சுமப்பா, அவரது மனைவி லட்சுமம்மா, மகன் சிவகுமார், உறவினர் ஆஞ்சி மகன் சுதீப் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் லட்சுமப்பாவுக்கு தலை பகுதியில் வெட்டு விழுந்தது . பின்பு இவர்கள் திருப்பி தாக்கியதில் தாக்கியதில் முருகேஷ் மனைவி சாரதா மற்றும் ராஜப்பா மனைவி சின்னம்மா (வயது 40), சின்னசாமி மகன் சிவப்பா (வயது 27) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஓசூர், தேன்கனிகோட்டை மருத்துமனையில் சேர்த்து பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Similar News