உள்ளூர் செய்திகள்

முத்தரசன் மீது நடவடிக்ைக எடுக்க போலீசில் புகார்

Published On 2022-09-09 09:46 GMT   |   Update On 2022-09-09 09:46 GMT
  • இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியதாக புகார்
  • சக்தி சேனா அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்

கோவை, செப்.9-

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சக்தி சேனா அமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

அவரது இந்த பேச்சு இந்து மதத்தினரை அவமதிப்பதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News