உள்ளூர் செய்திகள்

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்.

கடலூர் அருகே வியாபாரி இறந்த வழக்கில் நஷ்டஈடுவழங்காத அரசு பஸ் ஜப்தி

Published On 2023-02-03 09:35 GMT   |   Update On 2023-02-03 09:35 GMT
  • புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தா
  • எதிரில் வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார்,

கடலூர்:

கடலூர் அடுத்த எம். புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 47).காய்கறி வியாபாரி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்தேதி புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே சென்றபோது எதிரில் வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கில் நஷ்டஈடு கேட்டு இறந்த வைத்தியநாதன் மனைவி மற்றும் குழந்தைகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மூத்தவக்கில் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட வைத்தியநாதன் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து 20 லட்சத்து 5 ஆயிரத்து 534 ரூபாய் நஷ்டஈடாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் வழங்க உத்தரவிட்டது.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்கவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். 

Tags:    

Similar News