உள்ளூர் செய்திகள்

புதர்மண்டி காணப்படும் வணிக வளாகம்,

ஆண்டிபட்டி அருகே பராமரிப்பின்றி சிதிலமடையும் வணிக வளாகம்

Published On 2023-07-09 07:08 GMT   |   Update On 2023-07-09 07:08 GMT
  • ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
  • வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் கடந்த 2008-2009ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தற்போது வரை அந்த வணிக வளாகம் திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.

இதனால் வணிக வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே சிதிலமடைந்துள்ளது. இதனால் அரசு பணம் வீணாகியுள்ளது. எனவே இந்த வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

எனவே அதிகாரிகள் இந்த வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News