உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலி

Published On 2023-01-02 09:55 GMT   |   Update On 2023-01-02 09:55 GMT
  • ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
  • நோமல் திமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நோமல் திமாரி (வயது 29) .இவர் தனது உறவினர்கள் சிலருடன் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முஹம்மத் இஸ்மாயில் என்பவருடன் பெங்களூரு-ஓசூர் சாலையில் ஜுஜுவாடி அருகேயுள்ள வங்கி ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் மோதி விட்டார்.

இதில் நோமல் திமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடன் வந்த முஹம்மத் இஸ்மாயில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சிப்காட் போலிசார்விசாரித்து வருகின்றனர்.

இதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள முதுகம்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் மோட்டார் சைக்கிளில் முனியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News