உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-03-09 09:53 GMT   |   Update On 2023-03-09 09:53 GMT
  • அவரது பெற்றோர், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
  • இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள ராம கொண்ட அள்ளி கிராம பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பத்தன்று வீட்டில் இருந்த அபிநயா திடீரென காணவில்லை. அவரது பெற்றோர், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News