உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 484 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

Published On 2022-06-21 09:50 GMT   |   Update On 2022-06-21 09:50 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 484 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 484 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் ஒருவருக்கு நாடக உபகரணங்கள் வாங்குவதற்காக மாவட்ட கலெக்டர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.10,000- க்கான காசோலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,000 மதிப்புள்ள ஆன்ட்ராய்டு செல்போன்களையும் ஒரு காது கோளாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் காதொலி கருவி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி ஷெர்லி ஏஞ்சலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News