உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-04 09:52 GMT   |   Update On 2023-10-04 09:52 GMT
  • சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர்.
  • நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சங்கங்களுக்கு பயன்படாத உபகரணங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்தும், திட்டம் கைவிடும் வரை அனைத்து பணியாளர்களும் வேலைக்கு செல்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சங்கங்களின் சாவிகளை காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என 60 சங்கங்களும், 145 பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்வதால் விவசாய கடன் வழங்கும் பணி, நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News