உள்ளூர் செய்திகள்

கொள்ளப்பள்ளி எனுசோனை சாலையில் உள்ள எலசமர்க்கனப்பள்ளி பகுதி.

சூளகிரி கொள்ளப்பள்ளி-எனுசோனை சாலையின் இருபுறமும் முள் புதர்கள் வாகன ஒட்டிகள்,பொதுமக்கள் அவதி

Published On 2022-12-10 14:15 IST   |   Update On 2022-12-10 14:15:00 IST
  • எனு சோனைக்கு செல்லும் தார்சாலை மிகவும் குறுகலான சாலை.
  • வாகனங்கள் அதிக அளவு இப்பகுதி பகுதி கிராமங்களுக்கு சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளப்பள்ளியில் இருந்து எனு சோனைக்கு செல்லும் தார்சாலை மிகவும் குறுகலான சாலை.

சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருவதால் சாலை ஒரமாக இருபுறமும் முள் புதர் அதிக அளவு வளர்ந்து வருவதால் 10 அடி சாலை தற்போது 7 அடியாக மாறி வருவதால் கனரக வாகனங்கள், இருச்ககர வாகனங்கள் அதிக அளவு இப்பகுதி பகுதி கிராமங்களுக்கு சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி ப்படுகின்றனர். இந்த முள் புதர்களை அகற்றி சாலையை விரிவுபடுத்த இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News