உள்ளூர் செய்திகள்

சேந்தங்குடி வதான்யேஸ்வரர் கோவிலில் சண்டி யாகம் நடந்தது.

சேந்தங்குடி வதான்யேஸ்வரர் கோவிலில் சண்டி யாகம்

Published On 2023-05-07 09:45 GMT   |   Update On 2023-05-07 09:45 GMT
  • உலக நன்மை வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் சண்டி யாகம் நடைபெற்றது.
  • 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள வதான்யேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் அருளாசியுடன் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சண்டி யாகம் நடைபெற்றது.

இந்த யாகம் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் கோவில் குருக்கள் பாலச்சந்தர் சிவாச்சாரியார் முதலில் கோமாதா பூஜை, 2-வது குதிரை பூஜை, 3-வது ஒட்டக பூஜை செய்தார்.

பின்னர், செவ்வாழைப்பழம், விளாம்பழம் உள்ளிட்ட 13 வகையான பழங்களுடன் பட்டுப்புடவை, பொட்டு தாலி உள்ளிட்டவைகள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, பிரம்மச்சாரியர்கள், 9 கன்னிகா பூஜைகளும், பைரவருக்கு வடுக பூஜைகளும் நடைபெற்றது.

இதில் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், வள்ளாலகரம் ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News