உள்ளூர் செய்திகள்

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்தபடம்.

தமிழகத்திற்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது - நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பெருமிதம்

Published On 2023-06-22 09:03 GMT   |   Update On 2023-06-22 09:03 GMT
  • ஆயூஸ் மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர்.
  • விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

நெல்லை:

பாரதீய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினரு மான நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடு நல்லாயிருக்க வீடு நல்லாயிருக்க வேண்டும் என புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொன்னதை போல் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலை வாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆயூஸ் மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழக த்தில் பயன்பெற்று ள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்ப ட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலை வாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடி க்கைகள் எடுக்கவேண்டும்.

பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்கு வதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அடுத்த முதல்-அமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரக்ளுடைய விருப்பம்.

நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

நெல்லையில் பருவமழை தவறிவிட்டது. பருவமழை நிலை மாறிவிட்டது. குளங்களில் நீரிருப்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ராஜ்பவன் மாறு வதாக சொல்வது முற்றிலும் தவறு. சில சட்ட திட்டங்களில் மாநில அரசுக்கும் கவர்னருக்கும் சில முரன்பாடுகள் இருக்கிறது. கருணாநிதி காலத்தில் இருந்தே இந்த நிலை நீடித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் நாகராஜன், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், இளைஞரணி பிரபாகரன், காசிராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News