உள்ளூர் செய்திகள்

ஓசூரில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்து

Published On 2023-07-26 09:59 GMT   |   Update On 2023-07-26 09:59 GMT
  • இரவு நேரங்களில் குறிப்பாக மழை காலங்களில் அந்த வழியாக வரும் கார் போன்ற வாகனங்கள், சாலையின் நடுவே தடுப்பு இருப்பது அறியாமல் அதன் மீது மோதுவது தொடர்கதையாகி வருகிறது.
  • அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணம் செய்த தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூவரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தை சாலையில், தாலுக்கா அலுவலகம் பகுதியில் சாலையின் நடுவே தடுப்பு உள்ளது.

இரவு நேரங்களில் குறிப்பாக மழை காலங்களில் அந்த வழியாக வரும் கார் போன்ற வாகனங்கள், சாலையின் நடுவே தடுப்பு இருப்பது அறியாமல் அதன் மீது மோதுவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, இரவில் அந்த வழியாக வந்த கார், தாலுக்கா அலுவலகம் எதிரே தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதே போல், நேற்றும் இரவு அதே இடத்தில் ஒரு கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்கவர் மீது மோதி நின்றது.

அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணம் செய்த தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூவரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News