உள்ளூர் செய்திகள்

தீப்பிடித்து பற்றி எரிந்த கார்

Published On 2023-07-17 09:08 GMT   |   Update On 2023-07-17 09:08 GMT
  • எதிர்பாராத விதமாக காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது.
  • தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தருமபுரி,

தருமபுரி அடுத்த செட்டிக்கரை அருகேயுள்ள சத்யா நகர் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான காரை, உறவுக்கார இளைஞர்கள் சிலர் நேற்று மாலை மைதானத்திற்கு எடுத்துச் சென்று கார் ஓட்டி பழகும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்பகுதியில் இருந்த சிலர் கார் பயிற்சியில் ஈடுபட்டவர்களை இப்பகுதியில் அச்சுறுத்தும் வகையில் காரை ஓட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

அப்போது காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி தூரமாக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது.

இதனைக் கண்டு காரில் வந்தவர்கள் பார்த்துள்ளனர். அப்போது காரில் தீ பற்றி எரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் உடனடியாக தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமானது.

இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News