திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 24 பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
- மகசூலின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
- ஏக்கர் 1க்கு அதிகபட்ச இழப்பீடாக, நெல் பயிருக்கு ரூ.36,700 வழங்கப்படும்.
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 24 பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுதிட்டம் 2023 சிறப்பு பருவம் அரசாணை பெறப் பட்டுள்ளது. சிறப்புபருவம் நெல்- ஐ பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டு காப்பீட்டு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்ப டுத்தும் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீக ரிக்கப்பட்ட முகவர்கள் மூலமா கவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். ஏக்கர் 1க்கு அதிகபட்ச இழப்பீடாக, நெல் பயிருக்கு ரூ.36,700 வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில்; ஏற்படும் இழப்புகளுக்கும் பிர்கா வாரியாக சோதனை அறுவடை செய்து இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இழப்பின் போது காப்பீட்டு தொகை தவறாமல் கிடைக்கும்.
விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி நெல் பயிறுக்கு ஏக்கருக்கு ரூ.550.50- செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை மக்கள் கணினி மையத்திற்கு சென்று பதிவேற்றம் செய்து பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.