உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் தற்கொலை முயற்சி?

Published On 2023-01-03 07:47 GMT   |   Update On 2023-01-03 07:47 GMT
  • ஜோஸ்வின் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
  • ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா?

கடலூர்:

கடலூர் சாவடியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜோஸ்வின் (வயது 42). இவர் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜோஸ்வின் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஜோஸ்வினுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக விடுமுறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி முதல் மீண்டும் மருத்துவ விடுப்பு நீடிக்க வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விடுப்பு தரவில்லை என கூறப்படு கிறது. இதன் காரணமாக ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News