உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் கொத்தனார் பலி

Published On 2023-11-14 10:51 IST   |   Update On 2023-11-14 10:51:00 IST
  • நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார்.
  • அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை புதூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News