உள்ளூர் செய்திகள்

தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2022-12-15 09:35 GMT   |   Update On 2022-12-15 09:35 GMT
  • மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
  • பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

மேகல சின்னம்பள்ளியில் நடந்த வீரபத்திரசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி (எம்.சி.பள்ளி) கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் வழிபடும் வீரபத்திரசாமி கோவில் உள்ளது- இந்த கோவிலில் மைலேரி மல்லேஸ்வர சாமி, வீரபத்திசாமி, நீலகிரி சாமி, சித்தப்ப சாமி, மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி அழைத்தல், தம்பட எருதின் தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும், பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு, வீரகாசி நடன நிகழ்ச்சியுடன், உற்சவ மூர்த்திக்ள திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மேகலசின்னம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News