உள்ளூர் செய்திகள்

மருதூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் காட்சி.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

Published On 2022-08-11 10:42 GMT   |   Update On 2022-08-11 10:42 GMT
  • காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர்.
  • நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரியில் இருந்து அண்ணா பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் மருதூர் கடைத்தெருவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆயிரக்கணக்கான லிட்டர் செல்லக்கேன் ஆற்றில் வீணாக செல்கிறது.

தற்போது கோடை காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியியிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிறது.

இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும், போன் மூலம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரியத்தினர்சரி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News