தமிழ்நாடு

பள்ளி பருவ காதல்- சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவன் போக்சோவில் கைது

Published On 2023-01-11 03:48 GMT   |   Update On 2023-01-11 05:08 GMT
  • சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
  • தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

கடலூர்:

கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திருவந்திபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 14 வயது சிறுமி படிக்கும் பள்ளியில் படித்து வந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரியவந்தது. இதனால் 2 பேரும் பள்ளியில் இருந்து படிப்பை நிறுத்திவிட்டனர். இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பமானார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். உடனே காதலன் உனனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்பின்னர் அந்த சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.

அப்போது சிறுவன் தனது அக்காளிடம் நான் இவளை திருமணம் செய்ய உள்ளேன். எனவே பத்திரமாக பாதுகாக்கும்படி கூறிவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார். தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விபரத்தை கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறினார். சம்பவம் நடந்த இடம் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் உடனடியாக அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags:    

Similar News