உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே கல்பொடை ஆற்றில் கரை ஒதுங்கிய இளம்பெண் பிணம் :போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-08-04 09:02 GMT   |   Update On 2023-08-04 09:02 GMT
  • ஆற்றங்கரையில் நடுமடுவு என்ற இடத்தில் அழுகிய நிலையில் 35 வயதுடைய பெண் பிணம் கரை ஒதுங்கியது.
  • கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண்ணின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் தேவனூர் உள்ளது. இங்குள்ள கல்பொடை ஆற்றங்கரையில் நடுமடுவு என்ற இடத்தில் அழுகிய நிலையில் 35 வயதுடைய பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கரியாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய பெண்ணின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண்ணின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. இதனால் இந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Tags:    

Similar News