உள்ளூர் செய்திகள்

கடலூரில் முட்புதரில் இறந்த நிலையில் வாலிபர் உடல்

Published On 2023-01-05 07:04 GMT   |   Update On 2023-01-05 07:04 GMT
  • பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
  • இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர்:

கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர். இதில் பண்ருட்டி எரிப்பாளையம் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 20) இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் குத்து விளக்கு செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று கடலூருக்கு வருவதாக கூறிவிட்டு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. ஆனால் இன்று காலை தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News