உள்ளூர் செய்திகள்

சேலத்தில் அழுகிய நிலையில் ரேஷன் கடை ஊழியர் உடல் மீட்பு

Published On 2023-07-08 09:17 GMT   |   Update On 2023-07-08 09:17 GMT
  • ரேசன் கடை ஊழியர் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார்.
  • அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

சேலம்:

சேலம் முகமது புறா ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாஜில் பிகர் அலி (வயது 65). ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவர் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. நேற்று இரவு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்து அந்த பகுதியினர் சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விஷம் குடித்த நிலையில் அவர் இறந்து கிடந்தார்.

மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது .

அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு, பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News