உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே பா.ஜ.க. கொடியை அறுத்து சென்ற மர்ம நபர்கள்

Published On 2023-10-17 08:06 GMT   |   Update On 2023-10-17 08:06 GMT
  • இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர்.
  • மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர். இத்தகவல் அறிந்த அக்கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் மரக்காணம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் தலைமையில் மரக்காணம் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மண்டவாய், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் இருந்த பா.ஜ.க. கொடிகளை மர்ம நபர்கள் அறுத்து சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசாரால் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News