உள்ளூர் செய்திகள்
சைக்கிள் பேரணி.
- இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.
- இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.
கொடைக்கானல்:
உலக இயற்கை பாதுகாப்பு நாளையொட்டி இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.
பேரணியை பல்கலைக்கழக திவாளர் ஷீலா, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் கிளாரா தேன்மொழி, ரோட்டரி சங்க தலைவர் மதன்குமார், செயலாளர் அக்பர் ஷேட், முதன்மை விருந்தினர் டி.எஸ்.பி. மதுமதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.