உள்ளூர் செய்திகள்

ஓசூர் சென்னத்தூர் பகுதியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை

Published On 2023-07-26 15:40 IST   |   Update On 2023-07-26 15:40:00 IST
  • ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
  • நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

ஓசூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டிற்குட்பட்ட சென்னத்தூர் பகுதியில், மாநகராட்சியின் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில், மாநகராட்சி கவுன்சிலர் புருஷோத்தம ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News