உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து ஒரு மாதமாக 102 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை

Published On 2022-09-04 06:11 GMT   |   Update On 2022-09-04 06:11 GMT
  • அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
  • அணைக்கு வினாடிக்கு 3,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

தொடர்ந்து ஒரு மாதமாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 3,750 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News