உள்ளூர் செய்திகள்

வத்தலக்குண்டுவில் மது குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

Published On 2023-11-13 04:59 GMT   |   Update On 2023-11-13 04:59 GMT
  • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
  • வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு:

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் மகன் காளிதாஸ் (வயது25). கூலித்தொழிலாளி. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த பாண்டிபிரியா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த பாண்டிபிரியாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. தீபாவளி விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க காளிதாஸ் வத்தலக்குண்டு வந்தார். அப்போது தனது மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News