உள்ளூர் செய்திகள்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, போலீசாரிடம் பேரிகார்டுகளை ஒப்படைத்த காட்சி.

ஆலங்குளத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பேரிகார்டுகள்

Published On 2023-11-08 08:27 GMT   |   Update On 2023-11-08 08:27 GMT
  • ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும்.
  • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும். இதன்காரணமாக அங்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே பேரிகார்டுகள் வைக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து போலீசாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்த்திகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி. ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலங் குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 8 பேரிகார்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஆலங்குளம் பிரதான சாலை மற்றும் அம்பாசமுத்திரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

Tags:    

Similar News