உள்ளூர் செய்திகள்

பூக்குழி இறங்கும் அய்யப்ப பக்தர்கள்.

பித்தளைப்பட்டி அருகே பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்

Published On 2022-12-19 13:09 IST   |   Update On 2022-12-19 13:09:00 IST
  • அய்யப்ப பக்தர்கள் மேளதாளம் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக, குட்டியபட்டி பிரிவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் முன்பு வந்தனர்.
  • அய்யப்ப பக்தர்களின் 13-ஆம் ஆண்டு மண்டல பூஜை அன்னதானம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், பித்தளைபட்டி அருகே குட்டியபட்டி பிரிவில், அய்யப்ப பக்தர்கள் சார்பாக, 13-ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பைபாஸ் அருகே உள்ள ஸ்ரீசாலை சந்தன கருப்பு சுவாமி கோவிலில் இருந்து, அய்யப்ப பக்தர்கள் மேளதாளம் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக, குட்டியபட்டி பிரிவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் முன்பு வந்தனர்.

அங்கு அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முன்னதாக, ஹரிஹரசுதன் மணிமண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

அய்யப்ப பக்தர்களின் 13-ஆம் ஆண்டு மண்டல பூஜை அன்னதானம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், குட்டியபட்டி பிரிவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டினர் சிறப்பாக செய்தனர்.

Tags:    

Similar News